நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாத குழுவின் புதிய தலைவரான மலாம் பாகோ சுட்டுக் கொல்லப்பட்டதாக நைஜீரிய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத குழுவின் உள்நாட்டு அமைப்பான ஐ.எஸ்.ஐ.எல். குழுவின் தலைவரே சுட்டுக்கொல்லா்ாட்டதாக நைஜீரியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பாபகனா மோங்குனோ நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்த சம்பவத்துடன் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு தொடர்புள்ளதாகவும் அவா் கூறினார்.
ஐ.எஸ்.ஐ.எல். குழுவின் தலைவராக இருந்த அபு முசாப் அல்-பர்னாவி கடந்த வாரம் பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட பின்னர் மேற்கு ஆப்பிரிக்காவுக்கான ஐ.எஸ். தலைவராக மலாம் பாகோ செயற்பட்டு வந்தார்.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இரண்டு தலைவர்கள் அடுத்தடுத்துக் கொல்லப்பட்டமை அந்த அமைப்புக்கு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ். அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நைஜீரியால் இடம்பெற்றுவரும் மோதல்களில் இதுவரை சுமார் 350,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.